Monday, October 5, 2009

இணைய நண்பர்களுக்கு எச்சரிக்கை



இணைய நண்பர்களுக்கு ஒர் எச்சரிக்கை என்று நேற்று மின்னஞ்சலில் வந்த செய்தி.



WARNING!

If you belong to FaceBook, Twitter, MySpace - any gathering place online.

DO NOT accept a friend request from Christopher Butterfield.

He is a Hacker.

Warn your friends list! If even ONE of your friends adds him as their friend, he will hack into your computer's ID and address.


PLEASE TELL EVERYONE!



மேலும் விபரங்களுக்கு இங்கே பார்க்கவும்.


இது உண்மையா அல்லது வதந்தியா..?? விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லவும்.

Thursday, October 1, 2009

செட்டி நாட்டு சினிமா




உலக சினிமா பார்க்க ஆரம்பித்த பிறகு கதைகள் படிக்கும் ஆர்வம் மிகவும் குறைந்து போனது. கதைகள் என்ன..?? வாசிக்கும் அனுபவமும் கூடத்தான்.


உடல் நிலை குறைவாக இருந்த அருமை நண்பர் உண்மைத்தமிழனை சந்திக்க போன போது இத படிச்சு பாருங்க.. நல்லாயிருக்கும் என்று சொல்லி பதிவர் சுப்பையா வாத்தியார் எழுதிய “செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள்” புத்தகத்தை பரிந்துரைத்தார்.



முதலில் ஒரு கதையை படித்து பார்ப்போம் என்று ஆரம்மித்தவுடன் விறு விறுப்பு பற்றி கொண்டது. எளிய நடை, சிறந்த திறனாய்வு, சிரிக்கவும் சிந்திக்கவும் யதார்த்தமான எழுத்துகள் என அனைத்தும் அற்புதமாய் இருந்தது.




மொத்தம் 160 பக்கங்களில் 20 கதைகள். அனைத்தும் நகரத்தார் வாழ்கையின் பின்னணியில் எழுதப்பட்டது.



நகரத்தார் வீட்டு நிகழ்ச்சிகள், நடை முறைகள், பேச்சு வழக்குகள், அவர்களின் வாழ்வின் நிறை குறைகள் எல்லாம் நன்கு வெளிப்பட்டு ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக கவியரசர் கண்ணதாசனின் பொருத்தமான பாடல்களை ஆங்காங்கே இட்டு அழகு செய்திருக்கிறார் நூலாசிரியர்.



நகரத்தார் பின்னணியில் எழுதப்பட்டாலும் கதைகள் வெவ்வேறு ஊர்களில் நடைபெற்ற வண்ணம் ஒன்றுகொன்று மிகவும் வித்தியாசமாய் தனித்தன்மையுடன் விறு விறுக்க வைக்கிறது. ஹைதாராபாத்தில் நிகழும் ஒர் கதையில் பேகம் பஜார், சுல்தான் பஜார், கோட்டி, கொத்த பெண்டையா கடை, புல்லா ரெட்டி ரஸமலாய் என்று ஹைதாராபாத்தின் முக்கிய பகுதிகளையும் புகழ் பெற்ற கடைகளையும் சிலாகித்து எழுதியதை படித்தவுடன் என் மூன்று வருட அருமையான ஹைதை வாழ்க்கையில் சிறிது நேரம் மூழ்கி போனேன்.



ஒவ்வொரு கதையிலும் வேறு வேறு ஊர்கள், நிகழ்வுகள், வாழ்க்கை பற்றிய புரிதல்கள் என்று தனது பாணியில் கலக்கியிருக்கிறார். பல ஊர்களுக்கு அவர் சென்ற போது ஏற்பட்ட அனுபவங்களா.? அல்லது அங்கு வாழ்ந்த உறவு தொடர்புகளின் ஈடுபாடா..?? அப்படிதான் இருக்கும் என நினைக்கிறேன். அவ்வளவு யதார்த்தமாக சொல்லியிருக்கிறார். ஆசிரியரின் கூர்ந்த அவதானிப்பு அதை எழுத்தில் சொல்லிய விதமும் மிக அருமையாய் இருக்கிறது. அவர் நன்கறிந்த ஜோசியத்தையும் விட்டு வைக்கவில்லை. ஒரு கதையில் முழுமையாகவும் சிலவற்றில் சிறிது சிறிதாயும் சொல்லி வியக்க வைத்துள்ளார்.




”தந்தி மீனி ஆச்சி” என்ற சிறு கதையில் ஆச்சியை “தில்லான மோகனாம்பாள்” படத்தில் வரும மனோரமாவாகவும் ஆயா வீடு சிறுகதையில் ஆயாவை பாதகாணிகை படத்தில் வரும் M.V ராஜம்மாவாகவும், தீபாவளி பற்றிய ஒரு சிறுகதையில் நாயகியை சினேகாவும் சித்தரிக்க ஆரம்பித்தவுடன் படிக்கும் போதே நமது கற்பனையுடன் அந்தந்த கதாபாத்திரங்கள் காட்சியாய் மனதிரையில் ஒடச்செய்து நல்ல உத்தியை கையாண்டவிதம் ஒரு செட்டி நாட்டு சினிமாவை பார்த்த உணர்வை தந்தது. மண் வாசனை மட்டுமல்ல நல்ல மனித வாசனைகளின் அற்புத தொகுப்பாய் இருக்கிறது.

ஆனந்த விகடன் பாணியில் கதைகளுக்கு ஏற்ப சில ஒவியங்களை இட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது அபிப்பிராயம். அடுத்த தொகுப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

சிறுகதை ஆர்வமுள்ளவர்கள் வாசிப்பு அனுபவம் உள்ள அனைவரும் விரும்பி படிக்கவேண்டிய அருமையான புத்தகம்.


நூல் விபரம்:

ஆசிரியர்: SP.VR. சுப்பையா

பக்கங்கள் : 160

விலை : ரூபாய் 75

வெளியீடு: உமையாள் பதிப்பகம்

பழைய எண் 94 : புது எண் 14

சொர்ணாம்பிகா லே அவுட், ராம் நகர்

கோயம்புத்தூர் - 641 009.

அலைபேசி : 94430-56624

சென்னையில் புத்தகம் கிடைக்குமிடங்கள்

உமா பதிப்பகம்

18 / 171, பவளக்காரத் தெரு

மண்ணடி

சென்னை - 600001

தொலைபேசி எண்-25215363

குமரன் பதிப்பகம்

19, கண்ணதாசன் சாலை

தி.நகர் சென்னை-600017

தொலைபேசி எண் - 24353742

Friday, September 25, 2009

பதிவர்களுக்காக பாப்கார்ன்


நர்சிம்:

ஒரு நாள் கம்பரும் சோழ மன்னரும் மாலை நேரத்தில் சோலையில் உலாவி கொண்டிருந்தார்கள்.

ஒடிக்கொண்டிருந்த ஆற்றுநீர் காலில் படும்படியாக இருவரும் நீரின் ஓரமாகவே நடந்து செல்லும் போது கம்பருக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் குனிந்து அந்த தெள்ளிய நீரை அள்ளி இரண்டு வாய் குடித்தார். இதை கண்டதும் மன்னருக்கு குஷி வந்து விட்டது. கம்பரை மட்டம் தட்ட சரியான சந்தர்ப்பம் என எண்ணி “ கம்பரே ! என் காலில் விழுந்த நீரைத்தானே உண்டீர்’? என்றார்.


உடன் சற்றும் யோசிக்காத கம்பர் பட்டென்று “நீரே வந்து காலில் விழுந்தால் நான் என்ன செய்வது”? என்றார்.

மன்னர்.. அமைதியாக வெட்கப்பட்டு தலை குனிந்தார்
.


=========================================================

லக்கிலுக் & அதிஷா



பத்திரிகையுலகில் புதிய அடி எடுத்து வைத்திருக்கும் நண்பர்கள் அதிஷாவுக்கும் லக்கிக்கும் அனைத்து பதிவர்கள் சார்பிலும் என் மனதார வாழ்த்துகள். இந்த புதிய தலைமுறை ஜெயிக்கட்டும்.
என்னதான் பதிவுலகில் சில அறிவு ஜீவிகள் கமலை தீட்டி தீர்தாலும் அவரது ஐம்பது ஆண்டு கால சாதனைகளை வியந்து “தி சண்டே இந்தியன்” கமலின் பிரத்யேக பேட்டி 50 Q + 50 A பாணியில் கொடுத்திருக்கிறது.

10 ரூபாய்தான். நிறைய செய்திகள். நல்லாயிருக்கு. வாங்கி படியுங்கள்.

வாங்க முடியாத வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே கிளிக்குங்க.

மவுஸால பக்கத்தை திருப்பி படிக்கலாம். அழகா இருக்கு.


=============================================================

கேபிள் சங்கர்:



தொலைதூர கப்பலில் பயணிக்கும் பிரிட்டீஷ் மாலுமிகளுக்கு தினமும் காலை உணவு மதிய உணவு இரண்டுமே பழைய ரொட்டியும் தண்ணீரும் தான். சில சமயம் மட்டுமே ஒயின் அளிக்கப்படும்.

அதிர்ஷ்டம் இருந்தால் சில நாட்களில் மட்டும் மூன்றாவது தடவையாக சிறிது மாமிசத்துடன் சதுரமான தட்டில் வைத்து உணவு அளிக்கப்படும். தட்டின் வடிவத்தால் அதை ஸ்கொயர் மீல் என்றார்கள். அதுவும் ஒருவருக்கு தேவையான அளவில் போதுமானதாக இருக்கும். Three squares என்பது தினமும் மூன்று வேளை கலந்து கட்டி அடிப்பது. அதை நணபர் நல்லா செய்வார். அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

==================================

உண்மைத்தமிழன்


பல நூறு ஆண்டுகளுக்கு முன் செயின்ட் அகஸ்டின் ரோமுக்கு மத விஷயமாக செயிண்ட் அம்ப்ரோஸ் என்பவரை அனுப்பினார். அவருடைய பழக்கம் வாரத்தில் சில நாட்கள் உபவாசம் இருப்பது. ஆனால் ரோமிலோ வேறு நாட்களில் உபவாசம் இருந்தனர். அம்ப்ரோஸ் குழப்பமானார். உடனே செயிண்ட் அகஸ்டினை தொடர்பு கொண்டார். அகஸ்டின் கூறிய அறிவுரை தான் “ரோமில் இருக்கும் போது ரோமாபுரியினர் செய்வது போல் செய்” என்பது இன்றும் வழக்கத்தில் இருக்கும் சொல்லாகும். அண்ணன் உண்மைதமிழனும் அடிக்கடி சரியாக சாப்பிடுவதில்லை. ஊரோடு ஒத்துபோவதுமில்லை சின்ன பதிவும் எழுதுவதில்லை என்பது தான் என் சிறிய வருத்தம்.

=====================================================

தண்டோரா:



காக்டெயில் என்பது அண்ணன் தண்டோராவிற்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பெயர் என்படி வந்தது. கி.மு 3000 ஆண்டிலேயே காக்டெயில் இருந்திருக்கிறது. ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடையில் டைக்ரீஸ் ஆற்றின் கரைக்கு அடியில் டெர்ரகோடா பானைகள் அகழ்வாய்ச்சியாளர்களால் ஒரு சமயம் கண்டுபிடிக்கபட்டது. அப்பானைகளில் புளிக்கவைத்த பார்லி, தேன், ஆப்பிள்களின் சுவடுகளும் கண்டெடுக்கப்பது. So, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் சும்மா கலக்கி அடித்திருக்கிறான். டாஸ்மாக்கெல்லாம் சும்மா ஜீஜிபி தான்.


===============================================

டாக்டர் தேவன்மாயம்:



டாக்டர் தேவன் மட்டுமல்ல அனைத்து மருத்துவர்களும் எழுத படும் மருந்து சீட்டில் Rx என்று பார்த்திருப்பீர்கள். இது என்ன Rx..??

உயிர் காக்கும் மருத்துவம் தொழில் மட்டுமல்லாது கடவுளுக்கு நிகரானவர்களாக மருத்துவர்களை ஜீபிடர் கடவுளுக்கு பாவித்தனர் பண்டைய ரோமானியர்கள்.

R என்பது லத்தீன் சொல்லான recipre என்பதிலிருந்து வருகிறது. அதாவது இதை பரிந்துரைக்கிறேன் எடுத்து கொள்ளலாம் எனபதாகும். சின்ன x கடவுளின் அரசர் அதை ஏற்பதற்கான குறீயீடு. அதாவது அந்த ஜீபிடர் கடவுளே மருத்து சீட்டை எழுதுவதாகும் அவரின் கருணையோடு நோய் குணமாகும் என்பது அவர்களது ஐதீகம்.இது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது.
மதுரையில் சந்தித்த டாக்டர் தேவன் பழகுவதற்கும் இனிமையானவர். தொலைபேசியிலும் அடிக்கடி பேசுவார். ஆனால் டாக்டர் தேவன் பின்னூட்டத்தை மருத்து சீட்டில் எழுதாமல் இருக்கணும் அதுதான் என் பயம்.


நீங்கள் ஆதரவளித்தால் பதிவர்களுக்கான பாப்கார்ன் தொடரும்.

Thursday, September 17, 2009

உன்னை போல் ஒருவன்







20 வருடமாக விடாது கடைபிடித்து வரும் First Day.. First Show.. விரதம் கலைந்து விடுமோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளை ரசிகர் மன்ற சிறப்பு காட்சியில் பார்க்கும் வாய்ப்பு முதல் நாள் இரவே கிடைத்தது. நானும் நண்பர் தண்டோராவும் சென்றிருந்தோம்.


வெட்னஸ்டே இந்தி படத்தின் ரீமேக் என்றாலும் என் மதிப்பிற்குரிய கமல் + மோகன்லால் என்ற புதிய கூட்டணியால் ஆவல் அதிகமாகியது.


தீவிரவாதத்தை ஒரு சாதாரண குடிமகன் எப்படி எதிர்க்க முடியும் என்ற கருத்தை முன்னிறுத்தி படம் நகர ஆரம்பிக்கிறது.


“உங்க சிட்டியில ஆறு இடத்தில RDX வெடிகுண்டு வெச்சிருக்கேன்” என்ற போன் கால் வந்ததும் நகர கமிஷனரான மோகன்லால் என்ற அற்புத நடிகரின் நடிப்பும் படம் பார்ப்பவர்களுக்கு விறு விறுப்பும் ஆரம்பமாகிறது.


குண்டு வெடித்ததா..?? எதற்காக ஒருவன் குண்டு வைக்கிறான்..?? அவன் தீவிரவாதியா..?? அவன் பெயரென்ன..?? அவனது கோரிக்கைகள் என்ன..? அவை நிறைவேறியதா..?? என்பதற்கு தியேட்டரில் படத்தை கண்டிப்பாக பாருங்கள்.


Quick points (In nutshell)


  • மோகன்லாலின் அற்புத நடிப்பு

  • இரா.முருகன் வசனம்

  • துணை நடிகர்கள் தேர்வு (குறிப்பாக இரண்டு காவல் துறை அதிகாரிகள்)

  • ஓளிப்பதிவு

  • ரொம்ப அலட்டாத ஆனால் ஆழமான நடிப்பில் கமல்

  • விறுவிறுப்பான திரைக்கதை

  • படத்தின் நீளம் (மொத்தம் 50 +50 நிமிடங்கள் மட்டுமே.. அப்பாடா இதை தான் ரொம்ப நாளா எதிர்பார்திருந்தேன்)


எனக்கு பட்ட குறைகள்:

  • பாடல்கள் இல்லை (வெச்சிருந்தாலும் மோசமாயிருக்கும்)
  • பின்னணி இசையில் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்காலாம்.
  • முதல்வர் என்றால் நமது முதல்வர் குரலாகத்தான் இருக்க வேண்டுமா.?

இவையெல்லாம் Trifling தான். (அதுக்கு தான் சின்ன font)

உன்னை போல் ஒருவன் = Just watch and simply enjoy..

Monday, August 17, 2009

பாப்கார்ன் ஆகஸ்டு 16 - 30


அமெரிக்காவுக்கு உண்டு..இந்தியாவுக்கு இல்லை..

வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை அந்த நாட்டிடம் தர சுவிஸ் நாட்டின் முன்னணி வங்கியான யுபிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் விவரத்தை வெளியிட முடியாது என்று அந் நாட்டு வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் மறுத்து விட்டது. இந்திய அரசு தனது நாட்டு டெலிபோன் டைரக்டரியை எங்களிடம் தந்து, அதில் உள்ளவர்களின் பெயரில் ரகசிய கணக்கு இருக்கிறதா என்று கேட்கலாம் என்று நினைத்தால், அது நடக்காது. அதை சுவிஸ் நாட்டு சட்டமும் அனுமதிக்காது.எனவே, ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை கேட்டு இந்தியா எங்களை அணுக வேண்டாம் என்று முகத்தில் அடித்தார்போலக் கூறியுள்ளது சுவிஸ்.


எனக்கென்னவோ அவங்களே இப்படி சொன்னாங்களா..?? இல்ல இதுல வேற எதுவும் உள்குத்து இருக்குமோன்னு தோணுது.. உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க....



*********************************************************************

இசையில் தொடங்குதம்மா..

மேஸ்ட்ரோவின் அற்புதை இசையில் உருவான பண்டிட் அஜய் சக்ரவர்த்தியின் இனிமையான குரலில் பல முறை கேட்டு சிலாகித்திருக்கிறேன். நேற்று எதோ ஒரு டிவி சேனலில் ஹே ராம் படத்தின் இந்த பாடலை கேட்டதும் பாடும் ஆபிஸில் கலக்கிய திவ்யாவின் நினைப்பு வந்து விட்டது. யூடியுப்பில் தேடி திவ்யாவின் குரலில் அந்த மெலோடியை பல முறை கேட்டேன். கேட்காதவர்கள் கேட்டு பாருங்கள்..


video

ஒரு ஆண் குரலில் வந்தப் பாடலை எடுத்துக்கொண்டு , அதுவும் கடினமான பாடலை ரசித்துப்பாடிய விதம் கொள்ளை அழகு.... இந்த பாடல் முடிந்ததும் நடுவர்களின் அதுவும் கிருஷ் சொன்ன வார்த்தைகள்.. வாவ்...

இந்த போட்டிக்கு பிறகு திவ்யாவின் குரலை வேறெங்கும் கேட்க முடியவில்லை..?? எங்கே திவ்யா...???



********************************************************************

இன்று ஒரு தகவல்

பதிவர் மோகன் என்பவரது மோகனச்சாரல் என்ற வலைப்பூவில் பார்த்தேன். இது முக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள தகவல். இப்பொழுது இரத்தம் பெறுவது மிகவும் எளிது, இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலைபெசியிலிருந்து "BLOOD" டைப் செய்து 96000 97000 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.


உதாரணமாக "BLOOD B+" .


உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.


********************************************************************


ஈ மெயிலில் வந்த SMS Jokes.


புது செல்லு...
புது நம்பரு...

கொழப்பறே சந்துரு!
அடிக்கடி நம்பர் மாத்தி, இம்சை கொடுக்கறதை நிறுத்துடா!
=========================
அவுட்கோயிங் போகல...
இன்கமிங் வரல...

மெஸேஜும் கிடக்கல...
செல்போன் சரியில்லனு புலம்பறத நிறுத்திட்டு..

ரீசார்ஜ் பண்ணு பேபி
========================

கசட தபற வல்லினம்.
ஙஞண நமன மெல்லினம்.
யரல வழள இடையினம்.
நீ போதையில் பேசும் "போழாழேய்" எந்த மொழியினம்?
==========================


ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி
=================================


தீவிரவாதி: உன் பெயர் என்ன?
விஜயகாந்த்: சிம்மா! நரசிம்மா!
தீவிரவாதி: ப்ரீபெய்டு சிம்மா? போஸ்ட் பெய்டு சிம்மா?

****************************************************************************

அடேங்கப்பா... அமி மைக்கேல்..


இங்கிலாந்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் ஏஜெண்டாக பணிபுரிபவர் அமி மைக்கேல் இவரது தற்போதைய வயது 32 இவர் தனது பதினேழாவது வயதில் தொடங்கி இது வரை ஆயிரம் ஆண்களுடன் `செக்ஸ்' வேலையில் ஈடுபட்டுள்ளார்.


Over To Ami

நான் 17-வது வயதில் கல்லூரியில் தொழில் நுட்ப படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது `மெக் டொனால்டு' என்ற நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றேன். அங்குள்ள ஊழியர்கள் என் அழகை பார்த்து கிறங்கினர். எல்லோருமே என்னை அடைய துடித்தார்கள். என்னால் வேலை செய்யவே முடிய வில்லை. இதனால் அவர்களை சமாதானப்படுத்துவது என்று முடிவெடுத்தேன். முதலில் நிறுவன மானேஜரை அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்தேன். நான் சந்தித்த முதல் அந்தரங்க ஆள் அவர்தான். இதன் பிறகு பல ஊழியர்களுடனும் உல்லாச மாக இருந்தேன்.
அங்குள்ள பியூனுக்கு கூட என்னை விட்டு வைக்க மனமில்லை. அந்த ஆளையும் திருப்தி செய்தேன். இதன் பிறகு நான் ஏராளமான ஆண்களை வேலை நிமித்தமாக சந்திக்க வேண்டியது இருந்தது.



ரியல் எஸ்டேட் நிறுவன ஏஜெண்டான நான் வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு வீடு, மற்றும் நிலங்களை காட்ட செல்வேன். எனது காரியங்களை எளிதாக சாதித்துக்கொள்ள அவர்களை `செக்ஸ்'க்கு அழைப்பேன்.


என் அழகில் மயங்கி யாரும் `நோ' சொன்னதில்லை. விலைக்கு வாங்க இருக்கும் வீட்டில் கூட நான் அவர் களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன்.
இதற்கெல்லாம் பகல், இரவு தனி இடம் என்று நான் பார்த்ததில்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நான் தயாராக இருப்பேன்.


எனக்கு துணைக்காக ஒரு பாய் பிரண்ட் வைத்துள்ளேன். திட காத்திரமாக இருக்கும் அவன் பிரச்சினை வந்தால் அடித்து, தூக்கி விடுவான்.
இதுவரை ஆயிரம் பேரை கண்டதால் இது பற்றி வெளியே சொல்லியுள்ளேன். என் பணி தொடர்ந்து நடக்கும். இந்த விஷயத்தில் நான் புதிய சாதனை படைக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.


என்ன சாதனை...??????



டிஸ்கி: அமி மைக்கேலை பற்றி ஒரு கவிதை எழுதுமாறு அண்ணன் தண்டோரா என்ற மணிஜியை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

Friday, August 14, 2009

ஆகஸ்டு 15

அன்று { 1947 }











ன்று { 2009}




அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்

Monday, August 3, 2009

பாப்கார்ன் ஆகஸ்டு 1 - 15


ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிறு Friendship Day எக்கசக்க SMS கள், ஈமெயில்கள் வந்து மொபைலும் ஜி மெயிலும் ஆக்கிரமித்துள்ளன. நல்லவேளை சனிக்கிழமை இரவு ஒரு உலக சினிமா பார்த்துவிட்டு மொபைலை அணைக்காமல் படுத்திருந்தால் எவனாவது போன போட்டு வாழ்த்து சொல்லியிருப்பான். Sorry Friends... விடியற்காலை 9 மணிக்கு எழுந்திருந்து ஆன் செய்தேன். சரி இந்த கிழமைகள் எப்படி வந்தன. ஒரு சின்ன தகவல்.

முதலில் பாபிலோனியர்கள் ஒவ்வொரு ஏழாவது நாளும் எந்த பணியும் செய்யாமல் மத சம்பந்த நிக்ழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். {ரொம்ப நல்லவங்க} ஜீஸ் இனத்தவரும் இதையே பின் பற்றினர். ரோமானியர்கள் எகிப்தியர்கள் கொஞ்சம் மாறுதல் செய்து கிழமைகளுக்கு பெயர் வைத்தனர்.

ஆனால் ஆங்கிலேயர்களே இதற்கு முழு வடிவம் கொடுத்தனர். தாங்கள் வழிபடும் கடவுள்களின் பெயர்களை அடிப்படையாக கொண்டு பெயர்களை சூட்டினர்.

சூரியன் நாளான ஞாயிறை Sunday

திங்கள் நாளாகிய சந்திரன் நாளை மூன் டே { Moon Day } என்று வைத்தனர். இதுவே மருவி Monday ஆனது. அதாவது சந்திரன் நாள்.
போர் கடவுளின் பெயரால் “டிவ்” {Tiw} என்ற பெயரினை (மார்ஸ்) செவ்வாய் நாளே Tuesday ஆனது.
{மெர்குரி} புதன் நாளை தங்களின் கடவுளான ‘ஓடன்’ (Woden) என்ற பெயரால் Wednesday என்றாக்கினர்.

{ஜீபிட்டர்} வியாழன் நாளை இன்னொரு கடவுளான (Thor ) என்ற பெயரால் Thursday என்றாக்கினர்.

{வீனஸ்} வெள்ளி நாளைத் தங்கள் கடவுள் “ஓடியனின்” துணைவியார் ‘பிரிக்’ என்ற பெயரால் Friday என்று ஆக்கி விட்டு ரோமானியர்கள் பின் பற்றிய சனிக்கிழமையை மட்டும் (சாட்டரன்) Saturday என்று அப்படியே பின் பற்றினர். ஆனா இந்தியாவில் இந்த சந்திரன் நாளைதான் நிறைய பேருக்கு பிடிக்கறதேயில்லை. ரைட்டா..??



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நம்பு... உன்னால் முடியும்.


என்னதான் வாய்ப்பு வசதிகள் இருந்தாலும் சதா அலுத்து கொள்பவர்களை அன்றாடம் சந்திக்கலாம். கடவுளால் நமக்கு எந்த குறையும் இல்லையென்றாலும் இருப்பதை வைத்து கொண்டு நிறைவுடன் வாழ இயலாதவர்கள் இந்த பெண்மணியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


Mr.X தனது வீட்டின் கூரை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் . Mr.X மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் “ என்ன விஷயம் எதற்க்காக என்னை கீழே வருமாறு அழைத்தீர்கள் “ என்று கேட்டார்.


அந்த சாமியார் “ நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்! அதை சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது! அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன், மன்னிக்கவும் “ என்றார்

உடனே Mr.X ” யோவ் எடுப்பது பிச்சை இதில் என்னய்யா ..? போலி கவுரவம்.. சரி பரவாயில்லை என்னுடன் வா” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூரை மேல் வேகமாக ஏறினார்.
அந்த சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலை கஷ்டப்பட்டு தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு Mr.எக்ஸை தொடர்ந்தார் சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , Mr. X மீண்டும் தனது வேலையை பார்க்கத் தொடங்கினார்.


சற்று நேரம் பொறுத்து விட்டு சாமியார் “ எனக்கு என்ன தருகிறீர்கள் ? “ எனக் கேட்டார் பொறுமை இழந்தவராக..

Mr.X “ என்னிடம் கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை” I am sorry ! என்றார்


சாமியார் “ முட்டாள் ! இதை கீழேயே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஷ்ட்டப்பட வைத்து மேலே அழைத்தாய் !

Mr.X “ என் பக்கத்து வீட்டுக்காரன் கீழே இருந்தான் அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல எனக்கு வெட்கமாக இருந்தது அதனால் தான் மேலே வரச்சொன்னேன் மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது (கஷ்டத்தையாவது) உங்களுக்கு தானமாக கொடுக்கலாம் என்று தான் தங்களை அழைத்தேன்! என்றார்..


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காமமா.. ஆமாம்..


வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு


காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.

Translation:
Sweet is the strict embrace of those whom fond affection binds, Where no dissevering breath of discord entrance finds.

Explanation:
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.