Friday, September 25, 2009

பதிவர்களுக்காக பாப்கார்ன்


நர்சிம்:

ஒரு நாள் கம்பரும் சோழ மன்னரும் மாலை நேரத்தில் சோலையில் உலாவி கொண்டிருந்தார்கள்.

ஒடிக்கொண்டிருந்த ஆற்றுநீர் காலில் படும்படியாக இருவரும் நீரின் ஓரமாகவே நடந்து செல்லும் போது கம்பருக்கு தாகம் எடுத்தது. உடனே அவர் குனிந்து அந்த தெள்ளிய நீரை அள்ளி இரண்டு வாய் குடித்தார். இதை கண்டதும் மன்னருக்கு குஷி வந்து விட்டது. கம்பரை மட்டம் தட்ட சரியான சந்தர்ப்பம் என எண்ணி “ கம்பரே ! என் காலில் விழுந்த நீரைத்தானே உண்டீர்’? என்றார்.


உடன் சற்றும் யோசிக்காத கம்பர் பட்டென்று “நீரே வந்து காலில் விழுந்தால் நான் என்ன செய்வது”? என்றார்.

மன்னர்.. அமைதியாக வெட்கப்பட்டு தலை குனிந்தார்
.


=========================================================

லக்கிலுக் & அதிஷா



பத்திரிகையுலகில் புதிய அடி எடுத்து வைத்திருக்கும் நண்பர்கள் அதிஷாவுக்கும் லக்கிக்கும் அனைத்து பதிவர்கள் சார்பிலும் என் மனதார வாழ்த்துகள். இந்த புதிய தலைமுறை ஜெயிக்கட்டும்.
என்னதான் பதிவுலகில் சில அறிவு ஜீவிகள் கமலை தீட்டி தீர்தாலும் அவரது ஐம்பது ஆண்டு கால சாதனைகளை வியந்து “தி சண்டே இந்தியன்” கமலின் பிரத்யேக பேட்டி 50 Q + 50 A பாணியில் கொடுத்திருக்கிறது.

10 ரூபாய்தான். நிறைய செய்திகள். நல்லாயிருக்கு. வாங்கி படியுங்கள்.

வாங்க முடியாத வெளியூர் / வெளிநாடு நண்பர்கள் இங்கே கிளிக்குங்க.

மவுஸால பக்கத்தை திருப்பி படிக்கலாம். அழகா இருக்கு.


=============================================================

கேபிள் சங்கர்:



தொலைதூர கப்பலில் பயணிக்கும் பிரிட்டீஷ் மாலுமிகளுக்கு தினமும் காலை உணவு மதிய உணவு இரண்டுமே பழைய ரொட்டியும் தண்ணீரும் தான். சில சமயம் மட்டுமே ஒயின் அளிக்கப்படும்.

அதிர்ஷ்டம் இருந்தால் சில நாட்களில் மட்டும் மூன்றாவது தடவையாக சிறிது மாமிசத்துடன் சதுரமான தட்டில் வைத்து உணவு அளிக்கப்படும். தட்டின் வடிவத்தால் அதை ஸ்கொயர் மீல் என்றார்கள். அதுவும் ஒருவருக்கு தேவையான அளவில் போதுமானதாக இருக்கும். Three squares என்பது தினமும் மூன்று வேளை கலந்து கட்டி அடிப்பது. அதை நணபர் நல்லா செய்வார். அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

==================================

உண்மைத்தமிழன்


பல நூறு ஆண்டுகளுக்கு முன் செயின்ட் அகஸ்டின் ரோமுக்கு மத விஷயமாக செயிண்ட் அம்ப்ரோஸ் என்பவரை அனுப்பினார். அவருடைய பழக்கம் வாரத்தில் சில நாட்கள் உபவாசம் இருப்பது. ஆனால் ரோமிலோ வேறு நாட்களில் உபவாசம் இருந்தனர். அம்ப்ரோஸ் குழப்பமானார். உடனே செயிண்ட் அகஸ்டினை தொடர்பு கொண்டார். அகஸ்டின் கூறிய அறிவுரை தான் “ரோமில் இருக்கும் போது ரோமாபுரியினர் செய்வது போல் செய்” என்பது இன்றும் வழக்கத்தில் இருக்கும் சொல்லாகும். அண்ணன் உண்மைதமிழனும் அடிக்கடி சரியாக சாப்பிடுவதில்லை. ஊரோடு ஒத்துபோவதுமில்லை சின்ன பதிவும் எழுதுவதில்லை என்பது தான் என் சிறிய வருத்தம்.

=====================================================

தண்டோரா:



காக்டெயில் என்பது அண்ணன் தண்டோராவிற்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த பெயர் என்படி வந்தது. கி.மு 3000 ஆண்டிலேயே காக்டெயில் இருந்திருக்கிறது. ஈராக்கிற்கும் ஈரானிற்கும் இடையில் டைக்ரீஸ் ஆற்றின் கரைக்கு அடியில் டெர்ரகோடா பானைகள் அகழ்வாய்ச்சியாளர்களால் ஒரு சமயம் கண்டுபிடிக்கபட்டது. அப்பானைகளில் புளிக்கவைத்த பார்லி, தேன், ஆப்பிள்களின் சுவடுகளும் கண்டெடுக்கப்பது. So, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் சும்மா கலக்கி அடித்திருக்கிறான். டாஸ்மாக்கெல்லாம் சும்மா ஜீஜிபி தான்.


===============================================

டாக்டர் தேவன்மாயம்:



டாக்டர் தேவன் மட்டுமல்ல அனைத்து மருத்துவர்களும் எழுத படும் மருந்து சீட்டில் Rx என்று பார்த்திருப்பீர்கள். இது என்ன Rx..??

உயிர் காக்கும் மருத்துவம் தொழில் மட்டுமல்லாது கடவுளுக்கு நிகரானவர்களாக மருத்துவர்களை ஜீபிடர் கடவுளுக்கு பாவித்தனர் பண்டைய ரோமானியர்கள்.

R என்பது லத்தீன் சொல்லான recipre என்பதிலிருந்து வருகிறது. அதாவது இதை பரிந்துரைக்கிறேன் எடுத்து கொள்ளலாம் எனபதாகும். சின்ன x கடவுளின் அரசர் அதை ஏற்பதற்கான குறீயீடு. அதாவது அந்த ஜீபிடர் கடவுளே மருத்து சீட்டை எழுதுவதாகும் அவரின் கருணையோடு நோய் குணமாகும் என்பது அவர்களது ஐதீகம்.இது இன்று வரை தொடர்ந்தும் வருகிறது.
மதுரையில் சந்தித்த டாக்டர் தேவன் பழகுவதற்கும் இனிமையானவர். தொலைபேசியிலும் அடிக்கடி பேசுவார். ஆனால் டாக்டர் தேவன் பின்னூட்டத்தை மருத்து சீட்டில் எழுதாமல் இருக்கணும் அதுதான் என் பயம்.


நீங்கள் ஆதரவளித்தால் பதிவர்களுக்கான பாப்கார்ன் தொடரும்.

Thursday, September 17, 2009

உன்னை போல் ஒருவன்







20 வருடமாக விடாது கடைபிடித்து வரும் First Day.. First Show.. விரதம் கலைந்து விடுமோ என்று பயந்திருந்தேன். நல்ல வேளை ரசிகர் மன்ற சிறப்பு காட்சியில் பார்க்கும் வாய்ப்பு முதல் நாள் இரவே கிடைத்தது. நானும் நண்பர் தண்டோராவும் சென்றிருந்தோம்.


வெட்னஸ்டே இந்தி படத்தின் ரீமேக் என்றாலும் என் மதிப்பிற்குரிய கமல் + மோகன்லால் என்ற புதிய கூட்டணியால் ஆவல் அதிகமாகியது.


தீவிரவாதத்தை ஒரு சாதாரண குடிமகன் எப்படி எதிர்க்க முடியும் என்ற கருத்தை முன்னிறுத்தி படம் நகர ஆரம்பிக்கிறது.


“உங்க சிட்டியில ஆறு இடத்தில RDX வெடிகுண்டு வெச்சிருக்கேன்” என்ற போன் கால் வந்ததும் நகர கமிஷனரான மோகன்லால் என்ற அற்புத நடிகரின் நடிப்பும் படம் பார்ப்பவர்களுக்கு விறு விறுப்பும் ஆரம்பமாகிறது.


குண்டு வெடித்ததா..?? எதற்காக ஒருவன் குண்டு வைக்கிறான்..?? அவன் தீவிரவாதியா..?? அவன் பெயரென்ன..?? அவனது கோரிக்கைகள் என்ன..? அவை நிறைவேறியதா..?? என்பதற்கு தியேட்டரில் படத்தை கண்டிப்பாக பாருங்கள்.


Quick points (In nutshell)


  • மோகன்லாலின் அற்புத நடிப்பு

  • இரா.முருகன் வசனம்

  • துணை நடிகர்கள் தேர்வு (குறிப்பாக இரண்டு காவல் துறை அதிகாரிகள்)

  • ஓளிப்பதிவு

  • ரொம்ப அலட்டாத ஆனால் ஆழமான நடிப்பில் கமல்

  • விறுவிறுப்பான திரைக்கதை

  • படத்தின் நீளம் (மொத்தம் 50 +50 நிமிடங்கள் மட்டுமே.. அப்பாடா இதை தான் ரொம்ப நாளா எதிர்பார்திருந்தேன்)


எனக்கு பட்ட குறைகள்:

  • பாடல்கள் இல்லை (வெச்சிருந்தாலும் மோசமாயிருக்கும்)
  • பின்னணி இசையில் ஸ்ருதி இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்காலாம்.
  • முதல்வர் என்றால் நமது முதல்வர் குரலாகத்தான் இருக்க வேண்டுமா.?

இவையெல்லாம் Trifling தான். (அதுக்கு தான் சின்ன font)

உன்னை போல் ஒருவன் = Just watch and simply enjoy..