Wednesday, January 13, 2010
சூரிய கதிர்
சில தினங்களுக்கு முன் சூரிய கதிர் இதழின் அலுவலகத்திலிருந்து ஒர் அவசர அழைப்பு. சினிமா சிறப்பிதழுக்காக உலக சினிமா பற்றி ஏதேனும் கட்டுரை எழுத முடியுமா என்றும் நேரில் வரும் படியும் அழைப்பு விடுத்தார்கள்.
நேரில் சென்று பத்திரிகையுலக ஜாம்பவான் திரு. ராவ் அவர்களை சந்தித்தேன். எத்தனை பெரிய மனிதர் அத்தனை எளிமையாய் பேசி உங்கள் மனதுக்கு பிடித்ததை முதலில் செய்யுங்கள் என்றார்.
உலக சினிமா என்றாலே என்றும் என் மனம் கவர்ந்த ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதியை பற்றி ஒரு முன்னோட்டமாக எழுதலாமா என்று கேட்டதற்கு உடனே சம்மதம் சொன்னார்.
அன்றே இரவோடு இரவாக எழுதியும் அனுப்பினேன்.
சூரிய கதிர் (ஜன 16 -31 ) இதழில் அச்சேறியிருக்கிறது. நண்பர்களுடன் பகிர்வதில் அளவற்ற மகிழ்ச்சி.
காலையில் முதன் முதலில் பார்த்து விட்டு அலைபேசியில் வாழ்த்து சொன்ன உண்மைதமிழனுக்கும் குறுஞ்செய்தி அனுப்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள் பல.
வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த நண்பர் மரக்காணம் பாலாவுக்கும் நன்றிகள்.
அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
டிஸ்கி: திரு. மதன் அவர்களும் எழுத்து சித்தர் பாலகுமாரனும் தொடர் எழுதும் பத்திரிகையில் அடியேனும் கட்டுரை எழுதியிருப்பது எனக்கு நிஜமாகவே Happy Pongal தான். இணையத்தில் படிக்க இங்கே
Labels:
Bloggers,
Happy moments,
Magazine,
suriyakathir,
சூரிய கதிர்
Subscribe to:
Posts (Atom)