Monday, August 17, 2009

பாப்கார்ன் ஆகஸ்டு 16 - 30


அமெரிக்காவுக்கு உண்டு..இந்தியாவுக்கு இல்லை..

வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை அந்த நாட்டிடம் தர சுவிஸ் நாட்டின் முன்னணி வங்கியான யுபிஎஸ் ஒப்புக்கொண்டுள்ளது.

சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை முடக்கி வைத்துள்ள இந்தியர்களின் பெயர் விவரத்தை வெளியிட முடியாது என்று அந் நாட்டு வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டமாகக் மறுத்து விட்டது. இந்திய அரசு தனது நாட்டு டெலிபோன் டைரக்டரியை எங்களிடம் தந்து, அதில் உள்ளவர்களின் பெயரில் ரகசிய கணக்கு இருக்கிறதா என்று கேட்கலாம் என்று நினைத்தால், அது நடக்காது. அதை சுவிஸ் நாட்டு சட்டமும் அனுமதிக்காது.எனவே, ரகசிய கணக்கு வைத்துள்ளவர்களின் பட்டியலை கேட்டு இந்தியா எங்களை அணுக வேண்டாம் என்று முகத்தில் அடித்தார்போலக் கூறியுள்ளது சுவிஸ்.


எனக்கென்னவோ அவங்களே இப்படி சொன்னாங்களா..?? இல்ல இதுல வேற எதுவும் உள்குத்து இருக்குமோன்னு தோணுது.. உங்களுக்கு என்ன தோணுதுன்னு சொல்லுங்க....



*********************************************************************

இசையில் தொடங்குதம்மா..

மேஸ்ட்ரோவின் அற்புதை இசையில் உருவான பண்டிட் அஜய் சக்ரவர்த்தியின் இனிமையான குரலில் பல முறை கேட்டு சிலாகித்திருக்கிறேன். நேற்று எதோ ஒரு டிவி சேனலில் ஹே ராம் படத்தின் இந்த பாடலை கேட்டதும் பாடும் ஆபிஸில் கலக்கிய திவ்யாவின் நினைப்பு வந்து விட்டது. யூடியுப்பில் தேடி திவ்யாவின் குரலில் அந்த மெலோடியை பல முறை கேட்டேன். கேட்காதவர்கள் கேட்டு பாருங்கள்..



ஒரு ஆண் குரலில் வந்தப் பாடலை எடுத்துக்கொண்டு , அதுவும் கடினமான பாடலை ரசித்துப்பாடிய விதம் கொள்ளை அழகு.... இந்த பாடல் முடிந்ததும் நடுவர்களின் அதுவும் கிருஷ் சொன்ன வார்த்தைகள்.. வாவ்...

இந்த போட்டிக்கு பிறகு திவ்யாவின் குரலை வேறெங்கும் கேட்க முடியவில்லை..?? எங்கே திவ்யா...???



********************************************************************

இன்று ஒரு தகவல்

பதிவர் மோகன் என்பவரது மோகனச்சாரல் என்ற வலைப்பூவில் பார்த்தேன். இது முக்கியமான மற்றும் மிகவும் பயனுள்ள தகவல். இப்பொழுது இரத்தம் பெறுவது மிகவும் எளிது, இதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது என்னவெனில் உங்கள் அலைபெசியிலிருந்து "BLOOD" டைப் செய்து 96000 97000 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.


உதாரணமாக "BLOOD B+" .


உடனே ஒரு இரத்த கொடையாளர் உங்களை தொடர்பு கொள்வார்.


********************************************************************


ஈ மெயிலில் வந்த SMS Jokes.


புது செல்லு...
புது நம்பரு...

கொழப்பறே சந்துரு!
அடிக்கடி நம்பர் மாத்தி, இம்சை கொடுக்கறதை நிறுத்துடா!
=========================
அவுட்கோயிங் போகல...
இன்கமிங் வரல...

மெஸேஜும் கிடக்கல...
செல்போன் சரியில்லனு புலம்பறத நிறுத்திட்டு..

ரீசார்ஜ் பண்ணு பேபி
========================

கசட தபற வல்லினம்.
ஙஞண நமன மெல்லினம்.
யரல வழள இடையினம்.
நீ போதையில் பேசும் "போழாழேய்" எந்த மொழியினம்?
==========================


ராம்: நான் கலெக்டர் ஆகணும்!
சீதா: நான் டாக்டர் ஆவேன்!

ப்ரீத்தி: நான் நல்ல அம்மா ஆவேன்!

கார்த்தி: ப்ரீத்திக்கு நான் கியாரண்டி
=================================


தீவிரவாதி: உன் பெயர் என்ன?
விஜயகாந்த்: சிம்மா! நரசிம்மா!
தீவிரவாதி: ப்ரீபெய்டு சிம்மா? போஸ்ட் பெய்டு சிம்மா?

****************************************************************************

அடேங்கப்பா... அமி மைக்கேல்..


இங்கிலாந்தில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றில் ஏஜெண்டாக பணிபுரிபவர் அமி மைக்கேல் இவரது தற்போதைய வயது 32 இவர் தனது பதினேழாவது வயதில் தொடங்கி இது வரை ஆயிரம் ஆண்களுடன் `செக்ஸ்' வேலையில் ஈடுபட்டுள்ளார்.


Over To Ami

நான் 17-வது வயதில் கல்லூரியில் தொழில் நுட்ப படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது `மெக் டொனால்டு' என்ற நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றேன். அங்குள்ள ஊழியர்கள் என் அழகை பார்த்து கிறங்கினர். எல்லோருமே என்னை அடைய துடித்தார்கள். என்னால் வேலை செய்யவே முடிய வில்லை. இதனால் அவர்களை சமாதானப்படுத்துவது என்று முடிவெடுத்தேன். முதலில் நிறுவன மானேஜரை அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்தேன். நான் சந்தித்த முதல் அந்தரங்க ஆள் அவர்தான். இதன் பிறகு பல ஊழியர்களுடனும் உல்லாச மாக இருந்தேன்.
அங்குள்ள பியூனுக்கு கூட என்னை விட்டு வைக்க மனமில்லை. அந்த ஆளையும் திருப்தி செய்தேன். இதன் பிறகு நான் ஏராளமான ஆண்களை வேலை நிமித்தமாக சந்திக்க வேண்டியது இருந்தது.



ரியல் எஸ்டேட் நிறுவன ஏஜெண்டான நான் வாடிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு வீடு, மற்றும் நிலங்களை காட்ட செல்வேன். எனது காரியங்களை எளிதாக சாதித்துக்கொள்ள அவர்களை `செக்ஸ்'க்கு அழைப்பேன்.


என் அழகில் மயங்கி யாரும் `நோ' சொன்னதில்லை. விலைக்கு வாங்க இருக்கும் வீட்டில் கூட நான் அவர் களுடன் உல்லாசமாக இருந்துள்ளேன்.
இதற்கெல்லாம் பகல், இரவு தனி இடம் என்று நான் பார்த்ததில்லை. எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் நான் தயாராக இருப்பேன்.


எனக்கு துணைக்காக ஒரு பாய் பிரண்ட் வைத்துள்ளேன். திட காத்திரமாக இருக்கும் அவன் பிரச்சினை வந்தால் அடித்து, தூக்கி விடுவான்.
இதுவரை ஆயிரம் பேரை கண்டதால் இது பற்றி வெளியே சொல்லியுள்ளேன். என் பணி தொடர்ந்து நடக்கும். இந்த விஷயத்தில் நான் புதிய சாதனை படைக்க போகிறேன் என்று கூறியுள்ளார்.


என்ன சாதனை...??????



டிஸ்கி: அமி மைக்கேலை பற்றி ஒரு கவிதை எழுதுமாறு அண்ணன் தண்டோரா என்ற மணிஜியை அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

Friday, August 14, 2009

ஆகஸ்டு 15

அன்று { 1947 }











ன்று { 2009}




அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்

Monday, August 3, 2009

பாப்கார்ன் ஆகஸ்டு 1 - 15


ஆகஸ்டு மாதத்தின் முதல் ஞாயிறு Friendship Day எக்கசக்க SMS கள், ஈமெயில்கள் வந்து மொபைலும் ஜி மெயிலும் ஆக்கிரமித்துள்ளன. நல்லவேளை சனிக்கிழமை இரவு ஒரு உலக சினிமா பார்த்துவிட்டு மொபைலை அணைக்காமல் படுத்திருந்தால் எவனாவது போன போட்டு வாழ்த்து சொல்லியிருப்பான். Sorry Friends... விடியற்காலை 9 மணிக்கு எழுந்திருந்து ஆன் செய்தேன். சரி இந்த கிழமைகள் எப்படி வந்தன. ஒரு சின்ன தகவல்.

முதலில் பாபிலோனியர்கள் ஒவ்வொரு ஏழாவது நாளும் எந்த பணியும் செய்யாமல் மத சம்பந்த நிக்ழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். {ரொம்ப நல்லவங்க} ஜீஸ் இனத்தவரும் இதையே பின் பற்றினர். ரோமானியர்கள் எகிப்தியர்கள் கொஞ்சம் மாறுதல் செய்து கிழமைகளுக்கு பெயர் வைத்தனர்.

ஆனால் ஆங்கிலேயர்களே இதற்கு முழு வடிவம் கொடுத்தனர். தாங்கள் வழிபடும் கடவுள்களின் பெயர்களை அடிப்படையாக கொண்டு பெயர்களை சூட்டினர்.

சூரியன் நாளான ஞாயிறை Sunday

திங்கள் நாளாகிய சந்திரன் நாளை மூன் டே { Moon Day } என்று வைத்தனர். இதுவே மருவி Monday ஆனது. அதாவது சந்திரன் நாள்.
போர் கடவுளின் பெயரால் “டிவ்” {Tiw} என்ற பெயரினை (மார்ஸ்) செவ்வாய் நாளே Tuesday ஆனது.
{மெர்குரி} புதன் நாளை தங்களின் கடவுளான ‘ஓடன்’ (Woden) என்ற பெயரால் Wednesday என்றாக்கினர்.

{ஜீபிட்டர்} வியாழன் நாளை இன்னொரு கடவுளான (Thor ) என்ற பெயரால் Thursday என்றாக்கினர்.

{வீனஸ்} வெள்ளி நாளைத் தங்கள் கடவுள் “ஓடியனின்” துணைவியார் ‘பிரிக்’ என்ற பெயரால் Friday என்று ஆக்கி விட்டு ரோமானியர்கள் பின் பற்றிய சனிக்கிழமையை மட்டும் (சாட்டரன்) Saturday என்று அப்படியே பின் பற்றினர். ஆனா இந்தியாவில் இந்த சந்திரன் நாளைதான் நிறைய பேருக்கு பிடிக்கறதேயில்லை. ரைட்டா..??



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

நம்பு... உன்னால் முடியும்.


என்னதான் வாய்ப்பு வசதிகள் இருந்தாலும் சதா அலுத்து கொள்பவர்களை அன்றாடம் சந்திக்கலாம். கடவுளால் நமக்கு எந்த குறையும் இல்லையென்றாலும் இருப்பதை வைத்து கொண்டு நிறைவுடன் வாழ இயலாதவர்கள் இந்த பெண்மணியை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


Mr.X தனது வீட்டின் கூரை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் . Mr.X மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் “ என்ன விஷயம் எதற்க்காக என்னை கீழே வருமாறு அழைத்தீர்கள் “ என்று கேட்டார்.


அந்த சாமியார் “ நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்! அதை சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது! அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன், மன்னிக்கவும் “ என்றார்

உடனே Mr.X ” யோவ் எடுப்பது பிச்சை இதில் என்னய்யா ..? போலி கவுரவம்.. சரி பரவாயில்லை என்னுடன் வா” என்று சொல்லிவிட்டு மீண்டும் கூரை மேல் வேகமாக ஏறினார்.
அந்த சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலை கஷ்டப்பட்டு தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு Mr.எக்ஸை தொடர்ந்தார் சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , Mr. X மீண்டும் தனது வேலையை பார்க்கத் தொடங்கினார்.


சற்று நேரம் பொறுத்து விட்டு சாமியார் “ எனக்கு என்ன தருகிறீர்கள் ? “ எனக் கேட்டார் பொறுமை இழந்தவராக..

Mr.X “ என்னிடம் கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை” I am sorry ! என்றார்


சாமியார் “ முட்டாள் ! இதை கீழேயே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஷ்ட்டப்பட வைத்து மேலே அழைத்தாய் !

Mr.X “ என் பக்கத்து வீட்டுக்காரன் கீழே இருந்தான் அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல எனக்கு வெட்கமாக இருந்தது அதனால் தான் மேலே வரச்சொன்னேன் மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது (கஷ்டத்தையாவது) உங்களுக்கு தானமாக கொடுக்கலாம் என்று தான் தங்களை அழைத்தேன்! என்றார்..


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காமமா.. ஆமாம்..


வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு


காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்.

Translation:
Sweet is the strict embrace of those whom fond affection binds, Where no dissevering breath of discord entrance finds.

Explanation:
To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze.