

இல்லதரசிகளும் வீட்டிலிருந்த படியே ஆன்லைனில் வர்த்தகம் செய்வதின் அனுபவங்கள் குறித்து திருமதி. V.Rajeswari அவர்களும் இரண்டு நிமிடம் Telephonic Interview கொடுத்துள்ளார்கள்.
பங்கு சந்தையில் ஆர்வமுள்ளவர்கள், முதலீடு செய்ய நினைத்து பயத்துடன் விலகி நிற்பவர்கள் அனைவரும் கேட்கலாம்.
சில மொக்கை பதிவுகள் போன்று பல மொக்கை நிகழ்ச்சிகள் FM அலைவரிசைகளில் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தாலும் இது போன்று இன்னும் சில உபயோகமான நிகழ்ச்சிகளும் நிறைய வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
உங்கள் விருப்பம் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
அதன் ஒலி வடிவம் இங்கே
டிஸ்கி: V.Rajeswari எங்க வீட்டு எஜமானியம்மாதற்போது சென்னை மருத்துவ கல்லூரியின் மன நல பிரிவில் ஆராய்ச்சியாளராக பணி புரிந்து வருகிறார். மேலும் ‘உளநல சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்ற அமைப்பை நிறுவி அதன் இயக்குநராகவும் இருந்து வருகிறார். மனம் நலம் குறித்த பல தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நீங்கள் டாக்டரை பார்த்திருக்கலாம்.
தமிழில் இதுவரை எழுதிய நூல்கள் டீன் ஏஜ் பிரச்ச்னைகள், ஆளை அசத்தும் 60 கலைகள், அந்தரங்கம் இனிமையானது, ஆண் பெண், பெண்கள் மனசு, பெண்ணின் மறுபக்கம்.
தமிழில் இவரது வலைப்பூ இங்கே
டிஸ்கி 1 : நன்றி நக்கீரன்.
டிஸ்கி 2 : சாப்ட்வேர் என்று சொன்னதும் நினைவுக்கு வரும் கம்பெனியில் வேலை பார்க்கும் அந்த பெண்ணுக்கும் ( Age: 23 )மிகப்பெரிய பல நாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் அந்த பையனுக்கும் { Age: 27 } சென்ற வருடம் மிக விமர்சையாக திருமணம் நடந்தது. நேற்று அந்த பெண் சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்தி கேட்டு துடித்து போனேன்.
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
" Mr.பிரபாகரனை ..... பாக்கணும்...கொஞ்சம் கூப்பிட முடியுமா?.."
" யார் நீங்க..? உங்க டீடெய்ல்ஸ் சொல்லுங்க பிளீஸ்.." என்றாள் ரிசப்ஷனிஸ்ட்..
" ம். நான் வந்து.. ம். என் பேர் ரேஷ்மி.. ரேஷ்மின்னு சொல்லுங்க என்றாள் சற்று பயம் கலந்த குரலில்..
" ஹை. பிரபா.. சம் ஒன் இஸ் ஹியர் டு மீட் யு... ஹோல்ட் ஆன் அ செக்.."
" மிஸ். .. ரேஷ்மி ஹி இஸ் ஆன் த லைன்.. ப்ளீஸ்.." என தொலைபேசியை கொடுக்கிறாள்..
" ஹலோ மிஸ்டர்.பிரபாகரன்..."
"ம். யா ஸ்பீக்கிங்..நீங்க.."
" ம். நான் ரேஷ்மி.. ரிசப்ஷன்ல இருக்கேன் என்றாள்..
" அங்கேயே இருங்க.. இதோ வருகிறேன் ஒரு நிமிஷத்துல.."
"ம். காஃபி சாப்பிட்டுட்டே பேசலாமா..?.. இல்ல லஞ்சா..? "
சாப்பிடுறீங்களான்னு கேக்காம ஆப்ஷன்லா கொடுக்கிறான்... தவிர்க்க முடியலை..
" காபி போதும்.." வெட்கப்படுகிறாள்..
" ஒகே.. இன்னிக்கு காஃபி வித் ரேஷ்மி யோ.." ஏதோ பெரிய ஜோக் அடித்தவன் போல் சிரிக்க முயற்ச்சித்தான் , முக்கியமாக தயக்கத்துடன் இருக்கும் அவளுக்கு லேசான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த விரும்புகிறான்...
இவனை அடையப்போறவள் நிச்சயம் கொடுத்து வைத்தவள்தான் என மனதுள் எண்ணிக்கொள்கிறாள்..
" ம். சரி இப்ப சொல்லுங்க. என்ன விஷயம்.. அன்னிக்கு உங்களை கோவிலில் பார்த்ததுன்னு நினக்கிறேன்..."
"ம்."
" ஏன் என்னை பிடிக்கலைன்னு சொல்ல வந்தீங்களா... ?. என்னோட முன்நெற்றியில் முடி கொஞ்சம் கம்மிதான்.." அசடு வழிந்தான்..
" ஆனா எங்க வீட்டுல உங்களை எல்லோருக்கும் பிடிசுடுச்சு.."
சரியான லொட லொடதான்...என்னை பேசவே விடமாட்டேங்குறானே அப்படின்னு எண்ணிக்கொண்டிருக்கும்போதே ,
" சாரி, நீங்க பேசுங்க.. நான் பாட்டுக்கு லொட லொடன்னு.."
அட நான் மனதில் நினைத்ததை அப்படியே...????.. ஆச்சர்யப்படுகிறாள்..
அவனோ கதை கேட்கும் குழந்தை போல கன்னத்தில்கைவைத்து அவளையே பார்த்துக்கொண்டு மறு கையில் காபியை உறிஞ்சுக்கொண்டு கேஷுவலாய்..
" இல்ல.. அதான்.. வந்து..."
"3 வார்த்தை போட்டியா... சொல்லுங்க...அதுக்கு மேல.."
" அப்பா சொன்னார் உங்க வீட்டுல சம்மதம் னு...ஆனா எனக்கு திருமணம் ஆகணும்னு எங்க வீட்டுல எனக்கு ஜாதகத்துல ஏதோ தோஷம் இருக்கு. ஆனா அதை மறைச்சுட்டாங்க."
அதை சொல்லி முடிப்பதற்குள் ஏசி ரூமிலும் வேர்த்தது..
"ம்."
" அதான் உங்க கிட்ட நிஜத்தை சொல்லிடலாம்னு...." பேச முடியாமல் வார்த்தை வராமல்..தவித்தாள்
"ம்.."
பயந்தாள்..அவன் மெளனத்தை கண்டு...
பெருமூச்சு விட்டான்...
" காஃபி ஆறிட போகுது சாப்பிடுங்க முதலில்..." எடுத்து கொடுத்தான்.. பயத்தோடு கட்டளைபோல் வாங்கினாள்..
" ரேஷ்மி..."
"ம்.."
" ரேஷ்மி , " உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" , உங்களை விட..."
"இன் ஃபேக்ட் எனக்கு இந்த ஜாதகம் ஜோஸியத்துல எல்லம் துளியும் நம்பிக்கை இல்லை.."
" நீங்க நம்புறீங்களா.?"
" இல்லை " என தலையாட்டினாள்...
"ம்."
" என்ன பிடிச்சிருகா உங்களுக்கு.."?? என்று பணிவாகத்தான் கேட்டான்.
"ம்."
" ஆமா இல்லன்னு வாய தொறந்து சொல்ல மாட்டீங்களா.?" சிரித்துக்கொண்டே..
" ம். பிடிச்சுருக்கு.."
" ம். அப்புற்ம் என்ன... பொய் பொய்யாவே இருக்கட்டும்...நாம மெய்யான ஒரு வாழ்க்கையை தொடங்குவோம் சரியா..?"
"ம்."
" என்ன அதுக்கும் 'ம்' தானா.. ?.. இப்ப பேசாம கல்யாணத்துக்கு அப்புறமா மொத்தமா பேசலாம்னு ஐடியாவா..?"
மனதை கலக்கிய பாரம் உடைந்து கலகலவென சிரித்தாள்..
" சரி இன்னிக்கு லஞ்ச் என்கூடதான்..." என சொலிவிட்டு அவளை கேட்காமலே ஆர்டர் பண்ண சென்றான் பொக்கேவுக்கு...:)
டிஸ்கி: இது என் முதல் முயற்சி. உங்கள் பின்னூட்டதிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.