Friday, June 18, 2010

நறுமணப்பொருள்களின் அரசன்





நண்பர்களே..... நீங்கள் சைவமா, அசைவமா? எதுவாக இருந்தாலும் சரி.! தமிழ்நாட்டுக்காரர் என்றால் தினம் சாப்பாட்டில் கட்டாயம் ரசம் உண்டு .


பன்ச் டயலாக் இல்லாத விஜய் படமா..? அது போல மிளகில்லாத ரசமா? அதிலும் மிளகு ரசம் என்ற சிறப்பு ரசமும் கூட இருக்கிறதே..! அப்படி, மருத்துவ குணம் வாய்ந்த மிளகை தினமும் நாம் பயன்படுத்துகிறோம். உடல் ஆரோக்கியத்துக்கும், சீரணத்துக்கும் மிளகு பெரிதும் உதவுகிறது.அது மட்டுமல்ல. சிவப்பு மிளகாய் மெக்சிகோ நாட்டிலிருந்து நமக்கு இறக்குமதியான பொருள். இதன் பிறப்பிடம் அமெரிக்கா.



மிளகு..! நம் அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள். நம் சமையலில் மட்டுமல்ல,இன்று உலகம் முழுவதும், காரத்துக்கும், மணத்துக்கும், சுவைக்கும் மிளகு பயன்படுத்தப் படுகின்றது.மிளகின் தாயகம் கேரளத்துமண்தான். அதானல்தான் மிளகிற்கு மலையாளி, குறுமிளகு மற்றும் கோளகம் என்ற வேறு பெயர்களும் உண்டு. ஆனால் அதிகம் மிளகைப் பயன்படுத்துவது அமெரிக்கர்கள்தான்.


நறுமணப் பொருள் வாணிகத்தில், மிகவும் தொன்மையான பொருட்களில் ஒன்றுதான்மிளகு .நறுமணப் பொருள்களின் ராஜா மிளகு தான் சதையால் மூடப்பட்ட கனி என்ற பொருள் கொண்ட சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானதுதான். இதன் சரித்திரம் மிக நீண்டது. சுமார் 5 ,000ஆண்டுகளுக்கு முன்பு ,இஞ்சியுடன் சேர்த்து, மிளகும் தெற்கு ஆசியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாம்.கருப்பு குறுமிளகு ஏற்றுமதி செய்யும் துறைமுகங்களும், வணிக சந்தைகளும் தென்மேற்கு இந்தியாவிலேதான் இருந்தன. கருப்பு மிளகு வாணிக சந்தையில், மதிப்பு மிக்க பொருளாக, கறுப்புத் தங்கமாகவே கருதப்பட்டது.மிளகு, மக்கள் பயன்படுத்தும் பணமாகவும், பண்டமாற்றுப் பொருளாகவும், உபயோகப்பட்டது.



உலகிலுள்ள நறுமணப் பொருள்களின் வாணிபத்தில், மிளகின் ஆதிக்கம் மட்டுமே, 25%ஆக உள்ளது. மேலும் இது மிகக் குறைந்த நாடுகளிலேயே விளைவிக்கப் படுகிறது இன்று உலகில் அதிகமாக மிளகு இறக்குமதி செய்யும் நாடு அமெரிக்கா. அதே போல உலகின் அதிகமாக மிளகை ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். இன்று புதிதாக மிளகு ஏற்றுமதியில் களத்தில் இறங்கியிருக்கும் நாடு பிரேசில்.இந்தியாவின் புராதன இதிகாசமான மகாபாரதத்தில், மிளகு போட்டு கறி விருந்து சமைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. சுஸ்ருத சம்ஹிதா என்ற மருத்துவ ஆவணத்தில் , மிளகு மதிப்பு வாய்ந்த பாரம்பரிய மருந்தாக கூறப்படுகிறது.



ரோமானியர்கள் காரம் மிகுந்த மிளகை மிகவும் மதித்தனர். ஐரோப்பாவில் பேரரசர் மார்கஸ் அரேலியஸ், அலேசாண்டிரியாவுக்கு வந்த வெள்ளை மிளகுக்கு, வணிக வரி விதித்தாராம். ஆனால் கருப்பு மிளகை விதிவிலக்காக விட்டுவிட்டாராம். ரோமப்பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னரும், ஐரோப்பியர்கள் மிளகை மிகவும் மரியாதையுடன் நடத்தினர். மிளகு சமையலில் முக்கிய வாசனை மற்றும் காரத்திற்கு மட்டும் பயன்படாமல், உணவை பதப்படுத்தவும் இது பயன்பட்டது.மிளகு விலை உயர்ந்த பொருளாக கருதப்பட்டதால் இதனை பணமாகவும், வரதட்சிணைப் பொருளாகவும் வரி கொடுக்கவும் , வாடகை கொடுக்கவும்,பயன் படுத்தினர்.இன்றும் கூட இது மிளகு வாடகை என்று சொல்லப்படுகிறது . . மிளகு, பூத்து காய்த்து படர்ந்து வளரும் கொடிவகையை சார்ந்தது. மிளகு பூக்கும் கொடி வகையில் பெப்பர்சினியே குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் பழத்துக்காகவே இது வளர்க்கப் படுகிறது.நறுமணப் பொருளாகவும், உணவுக்கு சுவையூட்டும் பொருளாகவும், பயன்படுகிறது பொதுவாக 4 மீ உயர மரத்திலோ, குச்சியிலோ கம்பிலோ படர்ந்து, ஆதாரத்துடன் வளரும்.



இதன் இலைகள் வெற்றிலை இலைபோல 5 -10 செ. மீ நீளத்தில் இருக்கும் இதன் பழத்தில் ஒரேஒரு விதை தான் இருக்கும். பழம் சிவப்பாகவும், உலர்ந்தபின் கருப்பாகவும் காணப்படும்மிளகு அதன் பொடி போன்றவை பொதுவாக கருப்பாகவே இருக்கும். இதனை கருப்பு மிளகு என்கின்றனர்.



இதைத தவிர, பச்சைமிளகு, வெள்ளை மிளகு, சிவப்பு மிளகு, பழுப்பு மிளகு போன்றவையும் உண்டு. பச்சை மற்றும் சிவப்பு மிளகு போன்றவை வேறு செடியிலிருந்து கிடைக்கின்றன இவை கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்திற்கு மேல் வளராது.


நிலநடுக்கோட்டிலி
ருந்து 15 டிகிரி அட்ச ரேகைப் பகுதிகளில் மட்டுமே மிளகு வளரும்.உலகின் அதிகமான மிளகு ஏற்றுமதியாளர் இந்தியா மட்டுமே உலகிலுள்ள நறுமணப் பொருள்களின் வாணிபத்தில், மிளகின் ஆதிக்கம் மட்டுமே, 25 % ,ஆக உள்ளது. மேலும் இது மிகக் குறைந்த நாடுகளிலேயே விளைவிக்கப் படுகிறது மிளகு கேரளாவிலிருந்து கிடைத்தாலும், மலபார் கடற்கரையை ஒட்டி விளைவது, மலபார் மிளகு என்றும். தெல்லிச்சேரியிலிருந்து விளைவது தெல்லிச்சேரி மிளகு என்றும் சொல்லப்படுகிறது. இதில் தெல்லிச்சேரி மிளகுதான் தரத்தில் உயர்ந்தது



பண்டை காலங்களில் எகிப்து மற்றும் ரோம் நாட்டில் பயன்படுத்தப்பட்ட மிளகு, அரேபியர் மூலமாக ரகசிய வழிகளில் வந்து சேர்ந்தது.பின்னர் கிரேக்கர்களும், ரோமானியர்களும் இதன் மூல இடத்தை அறிந்தனர். இந்த மதிப்பு மிக்க நறுமணப் பொருளுக்கான போட்டி என்பது,கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகம் தேடி,அதனை கண்டுபிடிக்கும் வரை.சுமார் 2000 ஆண்டுகள் வரை தொடர்ந்தது. அங்கு மிளகு இல்லை என்றதும் கதை சப்பென்று ஆகிவிட்டது.



மத்திய காலங்களில் போர்த்துகீசும், பின்னர் டச்சும் மிளகின் வாணிபத்தை ஏகபோக முதலாளியாகவே நடத்தினர் அப்போது மிளகு எடையிலும் கூட, தங்கத்தை விட மதிப்பு வாய்ந்ததாக கருதப் பட்டது. மேலும் அதுவே உடனடி பணமாகவும் பயன்பட்டது.ஒரு மிளகைக் கூட பணமாக பயன்படுத்தினர் என்றால், அதற்கு இருந்த மதிப்பை, மரியாதையை கற்பனை செய்து பாருங்கள்.அதிலுள்ள முக்கியமான அம்சம் என்றவென்றால், மிகை வாணிபத்தின் போது கையாளும் தொழிலாளிகள், அதனை கையாளும்போது, பை (Pocket) வைத்த சட்டையோ, கையை மடித்து அழகு படுத்துவதோ கூடாது . ஏன் தெரியுமா.அங்கே, மிளகை மறைத்து வைத்து, கொண்டுபோய் விடுவார்கள் என்ற பயம்தான். ஆச்சரியாமாக இருக்கிறாதா. உண்மைதான்.


இது தவிர பண்டைய காலங்களில் கெட்டுப்போன மாமிசத்தை மறைக்கவும் , நல்ல சுவையை நாக்குக்கு தரவும், மிளகை கேட்டு வாங்கி பயன்படுத்தினர். மத்திய காலங்களில் வசதி படைத்த பணக்காரர்கள் மட்டுமே பயன் படுத்தும் பொருளாகவே மிளகு இருந்தது. உலகிலேயே அமெரிக்கர்கள்தான் அதிக அளவு மிளகு உண்பவர்கள்.அதில் கார நெடியின் காரணி, அதன் நடுவிலுள்ள காப்சாய்சின் என்ற வேதிப் பொருளே. அது இதய நோய்களை கட்டுப் படுத்துகிறது: இரத்தக் குழாய்களை தூண்டிவிடுகிறது.




கொழுப்பையும், மிகை இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.இரத்தக் குழாய்கள் கடினமாவதையும், இரத்தத்தை கட்டியையும் குறைக்கிறது.உடலின் செல்களை பாதுகாத்து, வயதாவதைக் குறைக்கிறது. சீரணத்தை கட்டுப் படுத்துகிறது. வாயுத் தொல்லை மற்றும் வயிற்று பொருமலை குறைக்கிறது.





காவிரியில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறார்கள் ஒரு மாநிலத்தவர். முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் தர மறுக்கிறார்கள் இன்னொரு மாநிலத்தவர். ஒரே தேசத்துக்குள் இப்படி ஒரு கருத்து வேறுபாடு. ஆனால், கர்நாடகாவில் இருந்து வந்த ஒரு பெயர் தெரியாத இளைஞன், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மலையாள மன்னரிடம் உதவி பெற்று, தமிழ்நாட்டில் கால்வாய் தோண்டிக் கொடுத்திருக்கிறான். இதனால் இந்தக் கால்வாய்க்கே "கன்னடியன் கால்வாய்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.





கால்வாய் வெட்டியதோடு மட்டுமல்ல, இதில் எத்தனை ஆண்டுகளானாலும், தண்ணீர் வர வேண்டுமென்பதற்காக வித்தியாசமான வழிபாட்டுடன் கூடிய விநாயகர் கோயில் ஒன்றையும் கட்டி வைத்திருக்கிறான். அவன் கட்டிய "மிளகு பிள்ளையார்' கோயில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ளது. .



மழை இல்லாத காலங்களில், இங்குள்ள விநாயகரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அந்த புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும் என்று நம்பிக்கை.




அது தவிர 1916ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசு கெஜட்டின், 367 வது பக்கத்தில் மிளகு பிள்ளையார் வழிபாடு பற்றி சொல்லப்பட்டுள்ளது.



பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம் என்று சொல்வடை உண்டு. அட்லீஸ்ட் இல்லதரசிகள் நாலு மிளகு போட்டு ரசம் வச்சா போதும் நம்ம வீட்டிலேயே பயமில்லாமல் உண்ணலாம்.




நன்றி:
தகவல்கள் : பேராசிரியர் மோகனா & தினமலர்.
படங்கள் : கூகிளாண்டவர்.

10 comments:

க ரா said...

ரொம்ப நாள் கழிச்சு ஒரு இடுக்கை போட்றுக்கீங்கண்ணா. எங்க வீட்டுல ரசப்பொடி திரிக்கும் போதே மிளகு போட்றுவாங்கன்னா :-).

Paleo God said...

நல்ல காரமான பதிவு ஜி! :))

pudugaithendral said...

மிளகு நல்ல நண்பன். மிளகு கஷாயம் போட்டு குடிச்சா உடல்வலி, ஜுரம், கபம் எல்லா சரியாகிடும்.

சிகப்பு மிளகாயை உணவில் சேர்ப்பதை விட மிளகுத்தூள் சேர்த்து சமைத்தால் ஆரோக்கியமான உணவாகிறது.

மிளகுப்பிள்ளையார் கோவில் இதெல்லாம் புது தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.நன்றி. மிளகு பிள்ளையார் கோவில் பற்றி நானும் இப்போதுதான் கேள்விப் படுகிறேன்.

நட்புடன் ஜமால் said...

அட்லீஸ்ட் இல்லதரசிகள் நாலு மிளகு போட்டு ரசம் வச்சா போதும் நம்ம வீட்டிலேயே பயமில்லாமல் உண்ணலாம்.]]

ஹி ஹி ஹி

தேவன் மாயம் said...

உணவை பதப்படுத்தவும் இது பயன்பட்டது.மிளகு விலை உயர்ந்த பொருளாக கருதப்பட்டதால் இதனை பணமாகவும், வரதட்சிணைப் பொருளாகவும் வரி கொடுக்கவும்///

ஆச்சரியமான செய்தியாக உள்ளது!! ,

ஷர்புதீன் said...

//நம்ம வீட்டிலேயே பயமில்லாமல் உண்ணலாம்.//

:)

ஈரோடு கதிர் said...

ஈரோட்டிலும் கரூரிலும் “நளன்” என்ற் உணவகம் இருக்கிறது

காரத்திற்காக முழுக்க முழுக்க மிளகு மட்டுமே மயன்படுத்துகின்றனர். மிளகாய் பயன்படுத்துவதில்லை

நல்லதொரு பகிர்வு

அன்புடன் நான் said...

மிளகு சுவையான பகிர்வு
//த்திய காலங்களில் போர்த்துகீசும், பின்னர் டச்சும் மிளகின் வாணிபத்தை ஏகபோக முதலாளியாகவே நடத்தினர் அப்போது மிளகு எடையிலும் கூட, தங்கத்தை விட மதிப்பு வாய்ந்ததாக கருதப் பட்டது. மேலும் அதுவே உடனடி பணமாகவும் பயன்பட்டது.ஒரு மிளகைக் கூட பணமாக பயன்படுத்தினர் என்றால், அதற்கு இருந்த மதிப்பை, மரியாதையை கற்பனை செய்து பாருங்கள்.அதிலுள்ள முக்கியமான அம்சம் என்றவென்றால், மிகை வாணிபத்தின் போது கையாளும் தொழிலாளிகள், அதனை கையாளும்போது, பை (Pocket) வைத்த சட்டையோ, கையை மடித்து அழகு படுத்துவதோ கூடாது . ஏன் தெரியுமா.அங்கே, மிளகை மறைத்து வைத்து, கொண்டுபோய் விடுவார்கள் என்ற பயம்தான். ஆச்சரியாமாக இருக்கிறாதா. உண்மைதான்.//

ஆச்சரியம்தான்.... பகிர்வுக்கு நன்றிங்க.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பகிர்வுக்கு நன்றி